Sunday, November 29, 2009
அரசு மருத்துவமனையில் பரபரப்பு
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயாளியை, மருத்துவமனை ஊழியர்கள் வெளியே வீசியது, செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு நுழைவாயில் அருகில், சாலையோரம் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க பெண் அனாதையாக கிடந்தார். அழுக்கடைந்த துணிகளை போர்த்தியிருந்தார். அப்பெண் மெலிந்த தேகத்துடன் பரிதாபமாக காணப்பட்டார். காலை புறநோயாளிகள் பிரிவிற்கு வந்தவர்கள் அப்பெண்ணை பரிதாபமாக பார்த்தபடி சென்றனர். மருத்துவமனை எதிரிலிருந்த கடைக்காரர்கள் கூறும்போது, “நேற்றுமுன்தினம் மாலை 3 மணிக்கு மருத்துவமனை ஊழியர்கள், சம்பந்தப்பட்ட பெண்ணை, “ஸ்டிரெச்சரில்’ கொண்டு வந்து வீசிச் சென்றனர். அந்தப் பெண் இரவில் குளிரிலும், மழையிலும் கேட்பாரின்றி கிடந்தார். யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. அவர் தெலுங்கில் ஏதோ கூறிக் கொண்டிருந்தார். சிலர் தெலுங்கில் பேசியபோது ஆந்திர மாநிலம், நவ்வாடா மாவட்டத்தைச் சேர்ந்த எரையன் மனைவி என தெரிவித்தார்’ என்றனர். இது குறித்து, நேற்று சிலர் மருத்துவமனை டீனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் பகல் 12 மணிக்கு டாக்டர்கள் ஊழியர்களுடன் வந்து, “ஸ்டிரெச்சரில்’ அந்தப் பெண்ணை தூக்கிச் சென்று, வார்டில் அனுமதித்தனர். பின் அந்தப் பெண்ணுக்கு குளுக்கோஸ் ஏற்றினர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணை, ஊழியர்கள் வெளியே வீசிச்சென்றது குறித்து, டீன்(பொறுப்பு) ஜெகன்நாதனைக் கேட்டபோது அவர் கூறியதாவது: அந்த பெண் ஆந்திராவைச் சேர்ந்தவர். திருப்போரூரில் கணவனுடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். 15 நாட்களுக்கு முன் அவரது கணவர் இங்கு வந்து சேர்த்தார். அப்போது அவர்கள் தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த ஆவணங்களைப் பார்த்தபோது, அந்தப்பெண் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மருத்துவமனை ஊழியர்கள் பணம் வசூலித்து அவரது கணவனுக்கு 500 ரூபாயை கொடுத்தனர். பணத்தை வாங்கிய அவர், மூன்று நாட்களுக்கு முன், ஓடி விட்டார். யாரும் இல்லாத நிலையில், நேற்று முன்தினம் அந்த பெண்ணை ரத்தப் பரிசோதனைக்காக வார்டு பாய் ஸ்டிரெச்சரில் பரிசோதனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்றார். பின் மற்றொரு நோயாளியை அழைத்து வருவதற்குள் இப்படி நிகழ்ந்து விட்டது. இவ்வாறு டீன் கூறினார். நேற்றுமுன்தினம் மாலை 3 மணிக்கே ஸ்டிரெச்சரில் தூக்கிவந்து வெளியே போட்டுவிட்டு சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறியது குறித்து கேட்டதற்கு, “நேற்றுமுன்தினம் பணியிலிருந்த வார்டு பாய் இன்று விடுமுறை. நாளைக்கு வருவார். இது குறித்து விசாரிக்கிறேன். அவர் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுப்பேன்’ என்றார். சம்பந்தப்பட்ட பெண்ணை மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் சானடோரியம் மருத்துவமனைக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை, மனிதாபிமானமற்ற மருத்துவமனை ஊழியர்கள் வெளியே வீசிய சம்பவம், செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கணவர் விவாகரத்து; காரணம் டி.வி.பார்க்க விடவில்லையாம்
இந்தியாவில் மும்பை- புனே நகரைச் சேர்ந்த ஒரு மனைவி, கடந்த நான்கு ஆண்டு காலமாக தொலைக் காட்சியில் இந்தி மொழித் தொடர்களைப் பார்க்கவிடாமல் தன்னைத் தடுத்து கணவர் தன்னை அலைக்கழிப்பதாகச் சொல்லி விவாகரத்து பெற்றார். அந்தத் தம்பதியின் ஆறு வயது பிள்ளையை மனைவியிடமே ஒப்படைக்கும்படியும் குடும்ப நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்தியாவின் டெய்லி நியூஸ் அனலைசஸ் என்ற செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
2012 கலக்கு கலக்குகிறது சென்னை தியேட்டர்களில்
கதைப்படி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'மாயன்' என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள்தான், உலகின் தட்ப வெப்ப நிலையையும், பருவ காலங்களையும் கணித்தார்கள் என்று வரலாறு கூறுகின்றது. அவர்களின் கணிப்புப்படி 2012ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. அதற்குப் பிறகு உள்ள வருடங்கள் டியானால், 2012ஆம் ஆண்டுடன் உலகம் அழிந்து விடுமா? என்ற கேள்வியை மையமாக வைத்து மிகப் பிரமாண்டமான முறையில் 'கொலம்பியா பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் 20 கோடி டாலர் செலவில் உருவாகியுள்ளது. தமிழில் 'ருத்ரம்' என்ற தலைப்பில், 2009, நவம்பர் 13ஆம் தேதியன்று வெளியாகிய இப்படம், சமீபத்திய தகவலின்படி வெளியான மூன்றே நாட்களி்ல் உலகம் முழுவதும் 65.2 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் இயக்குநர் ரோலண்ட் எம்மெரிச் இயக்கிய தனது முந்தைய படங்களான 'இண்டிபென்டன்ஸ் டே (Independence Day )', 'த டே ஆப்டர் டுமாரோ' ( The Day After Tomorrow ) ஆகிய படங்களின் வசூலைக் காட்டிலும், இப்படம் மிகப் பெரிய வசூலை ஈட்டும் என்று கூறப்படுகிறது. எரிமலைத் தீப்பிழம்புகள் பூமிக்குள் இருந்து சீறிப் பாய்வது, மலைகள் பிளந்து உருள்வது, வானளாவிய கட்டடங்கள் சரிந்து மண்ணில் புதைவது, மேம்பாலங்கள் உடைந்து கார்கள் பொம்மைகளாய் வானில் இருந்து விழுவது, பாலம் உடைந்து ரயில் தூக்கி வீசப்படுவது, சுனாமி பேரலை நிலப்பகுதியை விழுங்குவது, கப்பல்கள் தூக்கி வீசப்பட்டு குடியிருப்புகளில் வந்து விழுவது எனப் படம் பார்க்கும் ரசிகர்களை உறைய வைத்துள்ளது. சென்னையில் களை இழந்து காணப்பட்ட சில திரையரங்குகள் இப்படத்தின் மூலம் புத்துணர்ச்சி பெற்றுள்ளன என்றால் அது மிகையாகாது. இந்த மொழி மாற்றுப் படத்கணிக்கப்படவில்லை. அப்பதுக்கு வார நாட்களில் கூட டிக்கெட் கிடைப்பதில்லை. சென்னையின் 13 திரையரங்குகளிலும் தொடர்ந்து 100 சதவிகிதம் "ஹவுஸ் ஃபுல்" காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது, இந்தப் படம்.
Subscribe to:
Posts (Atom)
